×

புலியடிதம்மத்தில் சிறு மழைக்கே குளமாகும் சாலை

காளையார்கோவில் :  காளையார்கோவில் அருகில் புலியடிதம்மம் கிராமத்தில் மடத்தான் புஞ்சைக்கு செல்லும் சிமென்ட் ரோடு மிகவும் மோசமாக உள்ளதால் சிறு மழைக்கு கூட தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. காளையார்கோவில் அருகில் புலியடிதம்மத்திலிருந்து மடத்தான்புஞ்சை, ஒத்தப்புஞ்சை கிராமங்களுக்கு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமப்புர சாலையாக சிமென்ட் ரோடு சில வருடங்களுக்கு முன்னால் போடப்பட்டது தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் ரோட்டின் உயரம் கூடிவிட்டதால் சிமிண்ட் ரோடு தாழ்வாக உள்ளது. ரோட்டை உயர்த்தாமல் எந்த மராமத்து பணிகளும் செய்யாததால் குண்டும் குழியுமாக தற்போது பெய்த சிறுமழைக்கு மழைநீர் வெளியேற முடியாமல் குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகின்றன. இச்சாலை வழியாக அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன் படுத்தி வருகிறார்கள். மழை காலங்கலில் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறன. அப்பகுதி மக்கள் கூறுகையில், சில வருடங்களுக்கு முன் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு போடப்பட்ட சில மாதங்களில் உடைந்து மேடும் பள்ளமாக இருந்து வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்துளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி மேலாவது ரோட்டை உயர்த்தி தரமான சிமென்ட் ரோடு அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்….

The post புலியடிதம்மத்தில் சிறு மழைக்கே குளமாகும் சாலை appeared first on Dinakaran.

Tags : Puliyadithamm ,Kalaiyarkoil ,Madathan Punchai ,Pulyadithammam ,Puliyadithammam ,Dinakaran ,
× RELATED தபால் ஓட்டுபோட்டு வீடியோ வெளியீடு...